Thursday, April 2, 2015

சுப்பிரமணிய சிவா (அறுசீர்க் கழ்நெடிலடி ஆசிரிய விருத்தம்)

தாய்த்திரு நாட்டிற் காகத்
      தன்னுடல் தன்னில் பற்றும்
நோய்தொழு நோயைப் பெற்று
      நுவலரும் இன்பம் எய்தி
தூய்த்திரு மேனி குன்றித்
      துடித்தநல் சுப்ர மண்ய
சேய்சிவா பிறந்த ஊரெம்
      திண்டியின் வத்தலக் குண்டாம்