Thursday, January 2, 2014

நல்லாசிரியர் (நேரிசை ஆசிரியப்பா)


ஒழுக்கம் இரக்கம் இறைமை கொள்கை
விழுப்பம் மிக்க கலைகளில் தேர்ச்சி
தொகுத்துக் கூறும் வன்மை மேன்மை
பகுத்துக் காணும் உலகியல் அறிவு
சான்றோர் போற்றும் சால்பாம் குணங்கள்
வான்றோய் மலைபோல் வளமோ டுயர்வு
நிலமதை யொத்த திண்மை பொறுமை
நலமிகு நிறைகோல் போன்ற நடுநிலை
மணத்தோடு மலரும் மலர்போல் மாட்சி
குணத்குயர் வோரே நல்லா சிரியர்
நன்னூல் நவிலுமிந் நலமோடு
பன்னெடுங் காலம் பார்மிசை வாழ்கவே!

No comments: