Wednesday, April 2, 2014

பைந்தமிழ்த்தேர்ப் பாகன் பாரதி (அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


விடுதலை உணர்வைத் தீப்போல
      விளைத்தவன் யார்?அவன் பாரதியே
கெடுதல் இல்லாச் சமுதாயம்
      கிளைத்திடச் செய்ததும் அவன்தானே?
அடுக்களைப் பெண்களை ஆண்களொடு
      அவனியில் வலம்வரச் செய்ததனால்
உடுக்களை நிகர்த்திடும் கவிஞருளே
      உதிக்கும் ஞாயிறு அவனாவான்

No comments: