Thursday, July 2, 2015

நிச்சயம் புகழ்நமைத் தேடி வரும் (எழுசீர்க்கழி நெடிலெடி ஆசிரிய விருத்தம்)

ஆர்வம் கொண்டு செயல்படும் போது
        அகிலம் நம்மைப் போற்றிடுமே
சோர்வே இன்றி உழைக்கும் போது
        சுற்றும் உலகம் நம்வசமே
வேர்வை சிந்திப் பாடு பட்டால்
       வெற்றிகள் வந்து குவிந்திடுமே
நேர்மை நமது கொள்கை என்றால்
       நிச்சயம் புகழ்நமைத் தேடிவரும்

No comments: