Monday, June 2, 2014

உழவருளம் மகிழும் (இருவிகற்ப நேரிசை வெண்பா)


கார்முகிலின் ஓட்டத்தைக் கண்டு கவின்மயில்
ஏர்மிகுந்த தோகைவிரித் தாடுதல்போல் - நீர்வரவே
நல்லேர் உழவருளம் நன்றாய் மகிழ்வுறும்தம்
நெல்லும் கரும்பும் நினைத்து

No comments: