Sunday, April 22, 2018

இவளும் பெண்தானோ?

இன்னும் சிற்சில நிமிடங்களில் தொடர்வண்டி கிளம்பப்போகிறது. பதிவுசெய்த இடங்களில் அவரவர் பெட்டிää பைகளோடு ஏறி அமர்ந்தனர். குழந்கைகள்ää இளசுகள்ää பெரியவர்கள்ää ஆம் ஒரு நிறைமாத கர்ப்பிணியும் இடங்களை நிரப்பி இருந்தனர். அந்த நிறைமாத கர்ப்பிணியுடன்ää தம்பி என்ற ஒரு இளைஞனும்ää அவளின் மூன்று வயதுப் பையனும் வந்து அமர்ந்தனர்ää அவளின் முகத்திதான் எத்தனை சோர்வு?

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் அந்த தொடர்வண்டியில்ää அவள் திருநெல்வேலி போவதாக அங்கிருந்த பெண்ணிடம் சொல்வது காதில் கேட்டது. பயணத்தில் மனம் ஒட்டாமல்ää பார்க்கும் மனிதர்களிடமும் பேசப்பிடிக்காமல் நான் அமர்ந்திருந்தேன். அவளின் மூன்று வயது மகள் “அம்மா நான் ஜன்னல் பக்கம் உட்காரனும்”ää என்று சொன்னபோதுää அவள் என் முகத்தைப் பார்த்தாள். நானும் சற்று விலகி அமரää குட்டிப்பயல் அருகே அமர்ந்தான். அவள் சிறு புன்முறுவலோடு என்னைப் பார்த்தபோதுää நானும் லேசாக முறுவலித்தேன்.

பயணம் தொடங்கி ஒருமணி நேரத்தில் செங்கல்பட்டு வந்தது. ஓரிரு நிமிடங்கள் வண்டி நின்று புறப்பட்டது. திருநங்கைகள் இருவர் கைதட்டியவாறுää காசுகேட்டுää ஆண்களின் தலையைத்தடவிää சட்டைப்பைகளில் கைவைத்து சில குறும்புகள் செய்தபோது எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. மனதுக்குள் ஒருவித கோபம் உண்டானது. பின் சற்று நேரத்தில் அவர்கள் நகர்ந்து போனார்கள். விழுப்புரம் நெருங்கும் போதுää அந்த கர்ப்பிணிப்பெண் எழுந்து அடிக்கடி கழிவறைக்குச் சென்று வந்தாள். பின் நிற்பதும்ää அமர்வதுமாக சற்று சிரமப்பட ஆரம்பித்தாள். உடன் வந்த பதினெட்டு வயதுத்தம்பி காதுகளில்ää வயர்களை மாட்டிக்கொண்டுää பாட்டுக்கேட்டுவாறு மேலே ஏறி படுத்துக் கொண்டான். எனக்குப் புரிந்ததுää அவளின் நிலை வலுத்து வருகிறது என்று. ஆனாலும் என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டமாக அவளைப்பார்த்தேன்.

தொடர்வண்டி விழுப்புரம் கடந்துää விருத்தாசலம் நோக்கிப் புறப்பட்டது. அவள் கண்களில் இப்போது கண்ணீர் வர ஆரம்பித்தது. பிற பயணிகள் அவரவர் தூங்கும் வசதி கொண்ட இருக்கைகளைப் போட்டு பாதிப்பேர் உறங்க ஆரம்பித்திருந்தனர்.
அப்போது திடீரென அவள் நின்ற இடம் முழுதும் நீர்கசிந்து நிறைந்துää நனைந்தது. அப்போது மீண்டும் அந்தத்திருநங்கைகளில் ஒருத்தி அங்கு வந்து நின்றாள்.

“உன்னை ஏறும்போதே பார்த்தேன்”ää ஏன் இன்னிக்கு பயணம் பண்ணனுமா?” “வீட்டிலே குந்த வேண்டியதுதானே? உனக்காகத் தான் நான் இங்க திரும்பவும் வந்தேன்”ää என்று அவள் சொல்லி முடிக்க “அம்மா”ää என்றவாறு அவள் குத்த வைத்தாள். சற்றும் எதிர்பாராமல் கண்விழித்த பிற பயணிகளும்ää நானும் அங்கிருந்து ஒதுங்குமாறுää அந்தத்திருநங்கை கூறää நாங்கள் சற்றும் எதிர்பாராத நிலையில் தான் கட்டியிருந்த காட்டன் சேலையை அவிழ்த்துää இரண்டு முழம் மட்டுமே கிழித்து அணிந்து கொண்டு மீதமுள்ள சேலையை லாவகமாக அந்தக் கர்ப்பிணியின் அடியில் தள்ளினாள்.

 பிறகு சிற்சில நிமிடங்களில்ää மற்ற பயணிகள் சற்றும் எதிர்பார்க்கும் முன் “ஞ்ஆ”… அழுகுரலுடன் அங்கு ஒரு உயிர் வெளிப்பட்டது. பயணிகள் ஓரிருவர் தாங்கள் வைத்திருந்த வெந்நீர் புட்டிகள்ää கத்தரிக்கோல் இத்தியாதிகள் கொடுத்து உதவää அந்தத் திருநங்கை பிரசவம் பார்த்து முடித்தாள். வண்டி அரியலூரில் நின்றபோதுää அவள் “இரயில்வே பாதுகாவலர்கள் உதவியுடன் உடல்நலம் கவனிக்கப்பட்டு………..

நான் எரிச்சலுடன் பார்த்த அந்தத்திருநங்கைää இப்போது எனக்குள் உயர்ந்து நின்றாள். சமுதாயம் புறக்கணிக்கும் இவளிடம் எத்தனை மனிதாபிமானம். இப்படியொரு உதவியை அவளால் எப்படிச் செய்ய முடிந்தது? பிள்ளை பெற்றவர்கள் (நானும்தான்) எல்லாம் திகைத்திருந்த வேளையில்ää முன்கூட்டியே அவள் முகக்குறிப்பறிந்து இந்தப் பெட்டிக்கு வந்துää உதவி புரிந்த இந்த நங்கையும் பெண்தானோ? ஆம் இவள் மிகவும் உயர்ந்த பெண்.

ஆணாகப்பிறந்த இவள் பெண்ணாகிää வாழ வழியறியாதுää இருந்தாலும் துணிவான மனமும்ää கூச்சமில்லாத அந்த நடவடிக்கையும்ää இரு உயிர்களைக் காப்பாற்றிய அந்த விவேகமும்…

இது ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்க வேண்டிய குணமல்லவா? இன்னும் என்னுள் வியப்பு அடங்கவில்லை.
-வனஜா பாண்டியன்

No comments: